வியாழன், 18 ஏப்ரல், 2024

இப்படி பிரார்த்தனை செய்து பாருங்கள்


 எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வதைப்போல, நம்  வாழும் வீட்டிற்கும், பூஜை அறைதான் பிரதானம் . நம் வழிபடக்கூடிய தெய்வசக்திகள் வசிக்கும் இடமாக பூஜை அறை இருக்கிறது.சிரசின் முக்கிய உறுப்பாக கண்களை நாம் சொல்வோம்.அதைப்போல , பூஜைஆறையின் கண்களாய் நாம் ஏற்றக்கூடிய விளக்கு இருக்க வேண்டும். ஒளி பொருந்திய கண்கள் வசீகரமான தோற்றத்தை கொடுக்கும். அதைப்போல , நாம் ஏற்றக்கூடிய விளக்கும் வீட்டிற்கும், தெய்வ சக்திகளுக்கும், வசீகரத்தை கொடுக்கும். “ஊருக்கு முன் விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் “ என்பது பழமொழி . அத்தகைய சிறப்புமிக்க விளக்கை தினமும் ஏற்றி மனதார பிரார்த்திக்கும் போது, நம் கவலைகளுக்கு தீர்வு நமக்கு இறைசக்தி தெளிவு படுத்தும் என்பதே உண்மை. பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வந்தால் பெரும் புண்ணியம் கிட்டும். முன்வினைப்பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.விளக்கு ஏற்றும் போது , நம் மனம் ஒரு நிலைப்பட வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் , விளக்கு ஏற்றும் நேரத்தில் ஸ்லோகங்களை ஜபிக்க சொன்னார்கள் .. நமக்கு பிடித்த எந்த தெய்வத்தின் மந்திரங்களை சொல்லி விளக்கு ஏற்றும் பொழுது, அந்த தெய்வத்தின் முழு அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.. மனதார நம்பிக்கை வைத்து இப்படி தினமும் முயற்சித்து பாருங்கள் 

சனி, 13 ஏப்ரல், 2024

பூஜை பாத்திரங்கள் பளிச்சிட



 பண்டிகை தினம் வந்தாலே, விளக்கு போன்ற பித்தளை பூஜை பாத்திரங்களை கழுவி பளபளப்பாக்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடும். ஆனா , நீ அப்படியில்ல.. ரொம்ப , ரொம்ப ஈசியா , பூஜை பாத்திரங்கள பளிச்சுன்னு ஆக்கலாம்.. இதுக்கு தேவை வெறும், இரண்டே பொருட்கள் தான்..முதல்ல, பூஜை பொருட்கள திசு பேப்பர் வச்சு, அதில இருக்க குங்குமம், எண்ணெய் இதுலாம் துடைச்சு எடுத்துக்கோங்க.. அப்புறம் நாம குடிக்க பயன்படுத்துற, உப்புத்தன்மையில்லாத சுத்தமான தண்ணீர பாத்திரங்கள் மூழ்கும் அளவு எடுத்துக்கோங்க. அதிகமா தண்ணீர் வேண்டாம். பாத்திரங்கள் மூழ்குற அளவு இருந்தாலே போதும். இப்போ அதில சேர்க்க  , லெமன் சால்ட் எடுத்துக்கோங்க இது கடைகள்ல சுலபமா  கிடைக்கும் பார்க்க சர்க்கரை போலவே இருக்கும். அந்த லெமன் சால்ட்டை 2 ஸ்பூன் சேர்த்து, எல்லா பாத்திரங்களையும் ஊறவைச்சிருங்க.. 20 நிமிடம் ஊறினாலே போதும். இப்போ இன்னொரு பாத்திரத்தில நல்ல தண்ணீர் வைச்சு, ஊற வைத்த பாத்திரத்தை , சபீனா வைச்சு,பூஜை பாத்திரங்கள மட்டுமே   தேய்க்க வெச்சு இருக்க ,நார் வைச்சு சும்மா தேய்த்தாலே போதும்..பின் ஒரு துணி வைச்சு ஈரமில்லாம துடைச்சுட்டா, பூஜை பாத்திரங்கள் எல்லாமே பளிச்.. பளிச்.. இதோ பாத்திரங்கள் எவ்வளவு பளபளப்பா இருக்கு பாருங்க..இப்போ விளக்குகளுக்கு குங்குமமிட்டாச்சு..இப்போ பார்க்க அம்பிகைய அலங்கரிச்சு, குங்குமமிட்ட போல இருக்குல்ல.. நீங்களும் முயற்சிபண்ணி பாருங்க   

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...